follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

Published on

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றை சூப்பர்-4 போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ஓட்டங்கள் அடித்தார்.

பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

அதனடிப்படையில் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்துள்ளது.

இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...