follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி

Published on

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 2022 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தகுதிப்பெற்றுள்ளன.

சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இவ்வாறு இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

நடப்பு செம்பியனான இந்திய அணி சுப்பர் 4 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணியும் சுப்பர் 4 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இன்றைய தினம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்றாம் நிலை தெரிவுக்காக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...