follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுஇலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!

Published on

2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை படைத்து எமது கிரிக்கெட் அணி, இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் மீண்டும் உயர்த்தி வைத்துள்ளது.

அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் இந்த சாதனைகள் உருவானது என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு வித்திட்ட அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள், நிர்வாகத்திற்கும் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையிலும், ஒற்றுமையுடன் தாய்நாட்டின் வெற்றிக்காக அனைவரும் செய்த பொதுவான அர்ப்பணிப்பு, கிரிக்கெட் உலகிற்கு மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, இந்த மகத்தான வெற்றிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...