follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுபதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

Published on

செப்டெம்பர் மாதத்தின் முதல் 19 நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது நாட்டிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மெதுவாக ஆனால் நிலையான அதிகரிப்பைக் குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிகத் தரவுகளின்படி, செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 10 ஆயிரத்து 796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனையடுத்து, ஆண்டுக்கான மொத்த வருகைகள் 5 இலட்சத்து 7 ஆயிரத்து 226 ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்கான தினசரி வருகை விகிதம் ஒரு நாளைக்கு 979 சுற்றுலாப் பயணிகளாகும் என்றும் அந்தச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறைக்கு ரூ.165 மில்லியன் வருவாய்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பெப்ரவரி 1ம் திகதி முதல் நாட்டிற்கு 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கை திரும்பலாம்

நேற்று (19) ஒரு நாளில் மட்டும் நான்கு இலங்கையர்கள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு வசதி செய்யப்பட்டதாகவும், இஸ்ரேலில் விடுமுறை நாட்களான...

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...