follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுஒருமித்த அறிக்கையை ஐ.நா பேரவை கவனத்தில் கொண்டுள்ளது - சுரேந்திரன் குருசுவாமி

ஒருமித்த அறிக்கையை ஐ.நா பேரவை கவனத்தில் கொண்டுள்ளது – சுரேந்திரன் குருசுவாமி

Published on

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள அறிக்கையில், ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கவனத்தில் கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முன்வைத்த பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, ஊடகவியலாளர் மீதான தாக்குதல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மனித உரிமைகள் பேரவையில் உள்வாங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது ஒரு சிலருக்கோ, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல எனவும் பாதிக்கப்பட்டவர்களுடைய குரலுக்கே செவிசாய்க்கும் எனவும் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளை பாரப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தமிழ் தரப்பினரதும் ஒன்றிணைந்த கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி குறித்து தவறான செய்தி – கம்மன்பிலவிடம் CID விசாரணை

முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை...

நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. பதவி...

துமிந்த திசாநாயக்க நீதிமன்றுக்கு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்...