follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP2இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

Published on

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார சேவையாக வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார பிரிவுகள் நிறுவப்படும் என்றும், எதிர்வரும் இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் புதிய ஆரம்ப சுகாதார பிரிவுகளின் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு சிறந்த ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் என்றும், ஆரம்ப சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் சுகாதார சேவையின் முக்கிய திட்டமாக அமையும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஆரம்ப சுகாதார மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஒரு நாள் பட்டறையில் பங்கேற்றபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மேம்பாட்டு நிர்வாக நிறுவனத்தின் “சங்கதானி மண்டபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஒரு நாள் பட்டறை நடைபெற்றது.

இந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறை மேம்பாட்டுத் திட்டத்தை மிகவும் வெற்றிகரமான திட்டமாக மாற்ற சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சுகாதார சேவைக்காக ஒதுக்கப்படும் வருடாந்திர பட்ஜெட் அனைத்து துறைகளுக்கும் போதுமானதாக இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதை ஒரு வெற்றிகரமான திட்டமாக மாற்றுவதன் மூலம், ஆண்டுதோறும் ரூ. 200 பில்லியனுக்கும் குறைவான நிதியில் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை துறைகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக மாற்ற, தேவையான சுகாதார ஊழியர்கள் புதிய ஆட்சேர்ப்பு மற்றும் தற்போது பயிற்சி பெறும் ஊழியர்கள் மூலம் உள்வாங்கப்படுவார்கள் என்றும், தேவையான பௌதீக வளங்களும் பற்றாக்குறை இல்லாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார சேவையில் பணிபுரியும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்கள் சேவைகளைச் செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து தவறான செய்தி வெளியிட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான தகவல்களை வெளியிட்டதாகக்...

சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக...