follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதியின் கடிதத்தை கையளித்தார் நசீர் அஹமட்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதியின் கடிதத்தை கையளித்தார் நசீர் அஹமட்!

Published on

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அமைச்சர் நசீர் அஹமட், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சரிடம் கடிதத்தைக் கையளித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் அப்துல் பின் ஷெய்யத் அல் நஹ்யானை, அபுதாபியில் சந்தித்த அமைச்சர் நசீர் அஹமட் குறித்த கடிதத்தை கையளித்துள்ளார்.

இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக, அமைச்சர் நசீர் அஹமட் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பிலும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பினூடாக இலங்கைக்கு சாதகமான உதவிகள் கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நசீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...