ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் (அடிப்படை) (Training Course on Development of Productivity Specialist) இன்று (16) கொழும்பில் ஆரம்பமாகியது.
இன்று 16 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு 12,NH Collection ஹோட்டலில் நடைபெறும் இந்த சர்வதேச பயிற்சி நிகழ்விற்காக இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்வான், மொங்கோலியா மற்றும் இலங்கை உட்பட 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உற்பத்தி திறன் அபிவிருத்தி நிபுணர்கள் 25 பேர் இதில் கலந்துகொண்டனர்.