follow the truth

follow the truth

June, 10, 2025
Homeஉள்நாடுரயில் சேவையை அதிகரிக்க திட்டம்!

ரயில் சேவையை அதிகரிக்க திட்டம்!

Published on

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலும் ஒரு ரயில் சேவையை முன்னெடுக்க ரயில் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாலை 7.20 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவுள்ள ரயில் , அதிகாலை 5.03 அளவில் பதுளை ரயில் நிலையத்தினை சென்றடையும்.

பதுளையில் மாலை 7.30 இற்கு புறப்படும் ரயில் அதிகாலை 5.28 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடையும்.

மேலும், இரவு நேர தபால் சேவை ரயில் நாளாந்தம் இரவு 8.30 அளவில் பதுளையிலிருந்து புறப்படவுள்ளதோடு, மறுநாள் காலை 7.32 இற்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை வந்தடையும்.

மேலும் மாலை 6.05 அளவில் கொழும்பிலிருந்து புறப்படவுள்ள ரயில் , மறுதினம் அதிகாலை 5.24 அளவில் பதுளை ரயில் நிலையத்தினை சென்றடையும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...