அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் மூன்றாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த குடியேறிகளில் சிலர் மீது போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
தமது இரண்டாவது பதவிக்காலத்தில் சட்டவிரோதக் குடிநுழைவை ஒடுக்கப்போவதாகக் கூறியிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கலிஃபோர்னியாவின் தேசியப் பாதுகாப்புப் படையினரை முடுக்கிவிட்டு வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டியதாக எதிரணியினர் கூறினர்.