கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலிமுகத்திட போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த சமூக ஊடக ஆர்வலர் டிலான் சேனாநாயக்கவின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (14) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட பகொட வீதியிலுள்ள அவரது வர்த்தக நிலையத்திற்கு வந்த இருவர் இவ்வாறு தாக்கியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தாக்குதலின் விளைவாக, அவரது கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, மேலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.