குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான புதிய உபகரணங்களை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தற்போது இலங்கை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களைக் குறைக்க புதிய உபகரணங்கள் தற்போது பாவிக்கப்படவுள்ளதாகவும், குடிபோதையிலான வாகன விபத்துக்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.
புதிதாக பெறப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.