follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு

மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு

Published on

நாட்டின் வருமான நிலைமை ஸ்திரமாகி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணமாக அதிக கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதி மஹா மல்வத்தில் நேற்று(28) பிற்பகல் மல்வத்து பிரிவின் கண்டி கலவிய பிரதம சங்கநாயக்கர் பல்லேகம ஹேமரதனவுக்கு ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று சகலரும் எதிர்நோக்கும் சிரமங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, 2024 ஆம் ஆண்டளவில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார முன்னேற்றத்துடன் அனைத்து மக்களுக்கும் சம்பள அதிகரிப்பு உட்பட நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அபிநவ அதமஸ்தானாதிபதிக்கு ஸ்ரீ சன்னஸ் பட்டாவையும், பிரதமர் தினேஷ் குணவர்தன விஜினிபாதத்தையும் வழங்கி வைத்தார்.

இந்த அன்னதான நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அநுராதபுரம் மகா விகாரையை அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாத்தல் தொடர்பான விசேட சட்டமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

“நாங்கள் அனைவரும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த பருவத்தில் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை வழங்க நாங்கள் உழைத்துள்ளோம். பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றால் ஏற்படும் அழுத்தத்தை நாங்கள் அனைவரும் தாங்குகிறோம். இதிலிருந்து விலகி எங்களால் இருக்க முடியாது.

நமது வருமானம் ஒரு நிலையான நிலைக்கு வந்தால், அது மேலும் மேம்பட்டால், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் உதவித்தொகையை நிவாரணமாக வழங்குவேன் என்று நம்புகிறேன். நமது பொருளாதாரம் மேம்படும்போது ஊதியமும் அதிகரிக்க வேண்டும். இலாபத்தை அதிகரிக்க வேண்டும்.

ஒரு அரசியல்வாதியாக இந்த உண்மையைப் பேசுவது கடினமான பணி. ஆனால் நான் வென்றாலும் தோல்வியடைந்தாலும் நான் எப்போதும் உண்மையைக் காட்டுவேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாடாளுமன்றத்தில் மக்கள் ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்..”

LATEST NEWS

MORE ARTICLES

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிறைவேற்று...

ரஷ்யா பிரச்சினைக்கு ஜனாதிபதியின் அவசர ஆலோசனை

விரைவில் ரஷ்யாவிற்கு தூதுக்குழுவை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். இன்று (16)...

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...