கொவிட்-19 வைரஸ் பரவி உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு நேற்று (31) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், கொவிட் தொற்றுநோய் ஒரு மாற்ற காலத்தை எட்டியுள்ளது, ஆனால் அதன் ஆபத்து இன்னும் மறைந்துவிடவில்லை.
கொவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, அதிகபட்ச சுகாதார அபாய எச்சரிக்கைகள் பேணப்பட வேண்டும் என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
உலகளாவிய தொற்றுநோய் இப்போது ஒரு மாற்ற காலத்திற்குள் நுழைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கை மேலும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், தொற்றுநோய் அதன் மேலும் தாக்கத்தை மட்டுப்படுத்த மிகவும் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் மேலும் வலியுறுத்தினர்.
தற்போது, உலகம் முழுவதும் 6.8 மில்லியன் மனித உயிர்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கொவிட் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் கணக்கிட முடியாதது.
மேலும், கடந்த டிசம்பரில் இருந்து, உலகம் முழுவதும் பதிவான கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.
அதன்படி, கடந்த 8 வாரங்களில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 170,000 என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் டெட்ரோசு அதானோம் கெப்ரேயஸ் மேலும் தெரிவித்திருந்தார்.