சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கை பெறுவதற்கு அவசியமான நிதி உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்குவதற்கு பாரிஸ் கிளப் (Paris Club) தயாராகவுள்ளது.
இலங்கைக்கான ஆதரவை (கடன்மறுசீரமைப்பிற்கான) பாரிஸ் கிளப் விரைவில் வெளியிடும் என தனது பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பணவீக்கம் பொருளாதார மந்தநிலை நாணயபெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்டுள்ள இலங்கை கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை செய்துகொண்டது.
பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கியுள்ளன. பாரிஸ் கிளப்பின் உத்தரவாதம் சீனாவில் தங்கியிருக்கவில்லை என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்பொன்று தெரிவித்தது.