follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபொஹொட்டுவ உறுப்பினர்கள் 200 பேர் நீக்கம்

பொஹொட்டுவ உறுப்பினர்கள் 200 பேர் நீக்கம்

Published on

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டதால், ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திப்பின் போதே, நேற்று (07) பதுளை ரிவர்சைட் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் கடந்த தேர்தலில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு கட்சியின் சிறப்புரிமைகளை பெற்ற பின்னர் ஏனைய கட்சிகளில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள சுமார் 200 உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கடிதங்கள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...