follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் அறிவித்தல்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் அறிவித்தல்

Published on

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வருபவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இன்று (13) கடவுச்சீட்டை பெற விண்ணப்பித்தவர்கள், தமது கடவுச்சீட்டை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவ்வாறு பெற வர முடியாதவர்களுக்கு உரிய முகவரிக்கு விரைவாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்தவர்கள், தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, அடுத்த நாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (20) வழமையான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று கடவுச்சீட்டு வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...