follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிக்கு எதிராக SJB இன்று கொழும்புக்கு

தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிக்கு எதிராக SJB இன்று கொழும்புக்கு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

தேர்தலை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. அரசு தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு உத்திகளை கையாளுகின்றமை தெளிவாகின்றது. இந்தத் தேர்தலுக்கு தேவையான பணத்தினை அரசு வழங்காது வேணுமென்றே தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சிக்கின்றது. அரசு பாரியளவில் தோல்வியை சந்திக்கும் என அரசு பயப்படுகின்றது. அதற்காகவே தேர்தல் நாடகம் ஆடப்படுகின்றது.. அதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, எமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்துகிறோம். ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று தான் தேர்தல் உரிமையும். அதனை இல்லாமல் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிராக இன்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருக்கின்றோம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...