follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்

Published on

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரிக்கொள்கைக்கு எதிராக எதிர்வரும் 13ஆம் திகதி முதல் பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

இந்த தொழில் நடவடிக்கையில் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...