ரூ.5,000 போலி நோட்டுகள் 700 சிக்கியது

373

ரூபா5,000 போலி நாணயத்தாள்கள் 700 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு தேவபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்த 40 வயதுடையவர் என்பதுடன், அவருடன் பணம் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here