follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்க 30 நாட்கள் தேவை

வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்க 30 நாட்கள் தேவை

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து அச்சுப் பணிகளையும் 30 நாட்களுக்குள் முடிக்க முடியும் என அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேவையான பணத்தைப் பெறுவதும் அவசியமானது என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்ட தொகை 40 மில்லியன் ரூபாவாகும். எவ்வாறாயினும், அச்சகம் ஏற்கனவே கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சுப் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 75 சதவீத தபால் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் 20 மில்லியன் ரூபா வழங்கினால் எஞ்சிய அச்சுப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை அச்சிடும் பணியாளர்கள் தினசரி 12 மணித்தியால ஷிப்ட் வேலை செய்து முடிக்க முடியும் என்றும் எவ்வாறாயினும், இதற்கு முன்னர் அச்சிடப்பட்டுள்ள அனைத்து தபால் மூல வாக்கு சீட்டுகளையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், அதற்கு 07 நாட்கள் தேவைப்படும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...