follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுமின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

மின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

Published on

டொலரின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் மின்சார உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் மின்சார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (04) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.

“.. கடந்த 03 மாதங்களுக்குள் 2022ஆம் ஆண்டு மின்சாரத் தேவையுடன் ஒப்பிடுகையில் 22% மின்சாரத் தேவை குறைந்துள்ளது. மேலும் டொலரின் பெறுமதி 375 ரூபாவிலிருந்து 335 ரூபாவாக தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் எரிபொருள் விலைகள் ஓரளவு குறைந்துள்ளதை நாம் அறிவோம். உலக சந்தையில் எண்ணெய் விலை மற்றும் நிலக்கரி விலை குறைந்துள்ளது. மின்சாரம் தயாரிக்க நாம் பயன்படுத்தும் ஆதாரங்களின் விலை குறையும் போது.

குறைக்கப்பட்ட மின்கட்டணத்தின் பலனை விரைவில் வழங்க வேண்டும். அதன்படி பெப்ரவரியில் மின் கட்டணம் 60% அதிகரித்ததை நாம் அறிவோம்.

30% குறைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணையம் உள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை விரைவில் அனுப்ப வேண்டும் என கடந்த மார்ச் 30ம் திகதி மின்சார வாரிய தலைவருக்கு சிறப்பு கடிதம் அனுப்பினோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாதத்திற்கான வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கையின் படி, ஜூன் 2025-இல்...