follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP1சாதாரண தரப் பரீட்சை காலத்தில் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள திட்டம்

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள திட்டம்

Published on

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் போது ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சை பரீட்சார்த்திகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான பின்னணியை தயார்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இது தொடர்பான பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 29ம் திகதி முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த காலப்பகுதியில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் பரீட்சையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் பரீட்சை முடியும் வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளருக்கும் – சுகாதாரம் மற்றும் ஊடக துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for...

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து – பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனி ஆய்வில் உறுதி

சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய...

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்...