follow the truth

follow the truth

July, 3, 2025
Homeவிளையாட்டுகால்பந்து மைதான நெரிசலில் சிக்கிய 12 பேர் பலி

கால்பந்து மைதான நெரிசலில் சிக்கிய 12 பேர் பலி

Published on

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று எல் சால்வடார். இந்த நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது.

இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண வந்த ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும், மைதானத்தினுள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமைடந்த ரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகரத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

இதனால் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த எல் சால்வடார் ஜனாதிபதி நயிப் புகலே உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...