follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுபொலிசாரால் தாக்கப்பட்ட நபர்! வைரலான வீடியோ! (Video)

பொலிசாரால் தாக்கப்பட்ட நபர்! வைரலான வீடியோ! (Video)

Published on

இரத்தினபுரி கிரியெல்ல வீதியில் பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கும் பொதுமகன் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

காரை ஓட்டிச் சென்ற ஒருவரை கைது செய்ய முயற்சித்த போது குறித்த நபர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பொலிஸ் உயர் அதிகாரியின் ஜீப் வண்டியில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு ஏற்றிச் செல்வதற்கு பொலிசார் முயற்சித்துள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு குறித்த நபரைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் ஏற்ற முயற்சித்துள்ளார்.

ஒழுங்கற்ற விதத்தில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபரை ஜீப்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வாகனத்திற்கு இடையூறு செய்ததாகவும், போக்குவரத்து விதிகளை மீறி அந்த நபர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பொலிஸாருடன் மோதலுக்கு முயற்சித்த நபர் பொலிஸ் அதிகாரிகளை தரக்குறைவாக திட்டியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரைக் கைதுசெய்ய முயற்சித்த போது உயர் பொலிஸ் அதிகாரியொருவர் அந்த நபரைத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபரை பிடித்து சோதனையிட்ட போது ​​அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த நபர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வாகனத்திற்கு இடையூறு செய்தமையினால் ஆத்திரமடைந்து பொலிசார் அவரைக் கைதுசெய்ததாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...