follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1மற்றுமொரு குர்ஆனின் பிரதி தீயிட்டு எரிப்பு

மற்றுமொரு குர்ஆனின் பிரதி தீயிட்டு எரிப்பு

Published on

ஈராக் தூதரகத்தின் முன் புனித குர்ஆன் நகல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டங்களின் கீழ் குர்ஆனை எரிக்க ஸ்வீடன் சமீபத்தில் அனுமதித்ததை அடுத்து ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் போராட்டங்கள் தொடங்கின.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகம் முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்வீடனில் மற்றொரு குர்ஆன் நகல் எரிக்கப்பட்டால், அந்நாட்டுடனான தூதரக உறவை துண்டிக்க நேரிடும் என ஈராக் எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், ‘டானிஷ் பேட்ரியாட்ஸ்’ என்ற குழுவைச் சேர்ந்த இருவர், கடந்த வாரம் இதேபோன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, அதை முகநூலில் நேரடியாக ஒளிபரப்பினர்.

டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த இருவர் குர்ஆனை எரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...