follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1"நான்கு வருடங்களாக நான் வதைக்கப்பட்டேன்" - மைத்திரி

“நான்கு வருடங்களாக நான் வதைக்கப்பட்டேன்” – மைத்திரி

Published on

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர் என பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக தாம் குற்றஞ்சாட்டப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் சேனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்றார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன,

“சேனல் 4 பற்றிய அந்தக் கடிதத்தின் வேலைகள் இன்று நிறைவடையும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறோம். பல்வேறு தரப்பினரால் 04 வருடங்களாக எனக்கு அனைத்து இன்னல்களையும் கொடுத்தார்கள். இப்போது நீங்கள் சேனல் 4 ஐப் பார்க்கும்போது, ​​எல்லாமே வித்தியாசமாக தெரிவுதை நீங்களே பார்க்கலாம்.”

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...