ஹமாஸ் படையினர் மேலும் 2 பணயக் கைதிகளை விடுவித்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஹமாஸ் படையினர் ஏராளமான இஸ்ரேலியர்களையும் வெளிநாட்டினரையும் பணயக் கைதிகளாக பிடித்துச்சென்றனர்.
பணயக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில், மேலும் இரண்டு பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த இரண்டு இஸ்ரேலியர்களை ஹமாஸ் தற்போது விடுவித்துள்ளது.
அவர்கள் வீட்டில் இருந்தபோது ஹமாஸ் அவர்களை பிடித்துச் சென்றது. அவர்களது கணவர்களும் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
சுமார் 220-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் ஹமாஸ் வசம் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.