பலத்த மின்னல் மற்றும் கனமழைக்கான எச்சரிக்கை

408

பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது நாளை (22) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என இன்று (21) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் இடியுடன் கூடிய, பலத்த மின்னலுடன் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சில இடங்களில் 75 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here