follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்க வேலைத்திட்டம்

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்க வேலைத்திட்டம்

Published on

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்கும் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் முன்மொழிவுக்கு அமைய இடம்பெறவுள்ள இந்தத் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டட வடிவமைப்பில் காணப்படும் கலாசார அடையாளங்கள், இயற்கை நிலக்காட்சி மற்றும் சூழல், வரலாற்று ரீதியாகப் பொருந்தும் சூழல், தேசிய அடையாளம் ஆகியவற்றின் காரணமாக, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பன இங்கு வலியுறுத்தப்பட்டது.

இவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கலாசார அடையாளமாகப் பாதுகாப்பது, படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன், அவர்களின் பதிப்புரிமையை பாதுகாப்பது மற்றும் கட்டடக்கலை, கலைமதிப்பக்கள் அழியாமல் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...