follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை உயர்வு

பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை உயர்வு

Published on

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், கோழி மற்றும் முட்டை விலை இஷ்டத்துக்கு உயர்ந்து வருகிறது

ஒரு கிலோ கோழிக்கறியின் விலையை இன்று (12) முதல் உயர்த்த கோழி இறைச்சி மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சி 30 – 50 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் நேற்று (11) பல பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 1200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை புதிய விலைகளின் கீழ் இன்று (12) முதல் 1250 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப முட்டை வரத்து இல்லாததால் முட்டை விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விலை கிறிஸ்மஸ் காலத்தில் மேலும் அதிகரிக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...