விளக்கமறியலில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோ தனது உடல்நிலையை பரிசோதிக்க வாரத்திற்கு ஏழு பேர் மட்டுமே தம்மைச் சந்திக்க அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரைப் பார்க்க ஒரு நாளைக்கு ஒருவர் மட்டுமே சிறைக்குச் செல்ல முடியும்.
ஜெரோம் பெர்னாண்டோவிடம் அதிக நட்பாக பழகும் வெளிநாட்டு வைத்தியர் ஒருவர் தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரை அனுமதிக்க வேண்டாம் என ஜெரோம் பெர்னாண்டோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் என்றும் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.