இலங்கையில் சிகிச்சை முறைமைகள், டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டதிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதாரத்துறையின் எதிர்கால மேம்பாட்டுக்காக நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோரின் சிகிச்சைச் சேவைகளுக்கான சுகாதாரப் பராமரிப்பின் செயல்திறன் மற்றும் துரிதத்தன்மையை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவுபடுத்தும் முறைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.