follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை

நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை

Published on

இலங்கையில் சிகிச்சை முறைமைகள், டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டதிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சுகாதாரத்துறையின் எதிர்கால மேம்பாட்டுக்காக நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோரின் சிகிச்சைச் சேவைகளுக்கான சுகாதாரப் பராமரிப்பின் செயல்திறன் மற்றும் துரிதத்தன்மையை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவுபடுத்தும் முறைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...