follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகொழும்பு-கண்டி பிரதான வீதிக்கு தொடர்ந்து பூட்டு (படங்கள்)

கொழும்பு-கண்டி பிரதான வீதிக்கு தொடர்ந்து பூட்டு (படங்கள்)

Published on

கொழும்பு-கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகன்னாவ பகுதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வீதியை மறு அறிவித்தல் வரை மூடி வைப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, கடுகண்ணாவை பிரதான வீதியில் மண்மேடும், பாறைகளும் சரிந்து வீழ்ந்தன.

இந்த நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டன.

இதையடுத்து, போக்குரவரத்து தடையை அறிவித்து, சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும் என நெடுஞ்சாலை அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...