follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை - OIC விளக்கமறியலில்

பெண் பொலிஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – OIC விளக்கமறியலில்

Published on

கல்பிட்டிய பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதே பொலிஸ் நிலைய ஓ.ஐ.சி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் மஜஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

ஆனால் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியதால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த ஓ.ஐ.சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்னொரு பக்கம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் சேவையில் இருந்தும் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் குளியாப்பிட்டிய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், தொடர்ந்து நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.

முன்னதாக, புத்தளம் நீதவான் நீதிமன்றம் சந்தேகநபருக்கு பிணை வழங்கியதுடன், நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரியை ஓ ஐ சி அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...