கடலோர ரயில்வேயில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மாத்தறை வரையான புகையிரத பாதையில் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்படும் திடீர் திருத்தப்பணிகள் இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு மற்றும் மாத்தறை நோக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களையும் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை இடையே ஒரே பாதையில் இயக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.