follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுஐபிஎல்லில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்

ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்

Published on

எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து அணியின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.

பாட்டியின் மரணம் காரணமாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் வீரர் ஏலத்தில் ஹாரி புரூக்கை 4 கோடி இந்திய ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியது.

எனினும், ஹாரி புரூக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்படும் வீரர் யார் என்பது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் தனது பாட்டி இறந்ததால் இந்த முடிவை எடுத்ததாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் கூறினார்.

ப்ரூக் கூறுகையில், தனது பாட்டி சிறுவயதில் இருந்தே தனக்கு நிழலாக செயல்பட்டதாகவும், அதனால் இந்த மரணம் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாக இருந்தது.

ப்ரூக்கின் பாட்டி பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...