கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார அண்மையில் தனியார் ஊடகமொன்றில் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முஸ்லிம்களும் தமிழர்களும் முயற்சித்தனர் என்று கூறியிருந்தார்.
இந்த விடயம் குறித்து பசில் ராஜபக்ஷவிடம் வினவப்பட்ட நிலையில் தான் அந்த கருத்தை ஏற்கவும் மாட்டேன் நிராகரிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அத்தோடு அப்படி முஸ்லிம்களும் தமிழர்களும் அப்படி கொலை செய்ய வந்தார்கள் என்று எங்கும் உத்தியோகபூர்வமான தகவல்கள் இல்லை. எனவே அது பற்றி கருத்து சொல்லவும் முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.