இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு இன்று (21) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின் போது, இக்குழுவினர் அரசாங்கக் கட்சிகள், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல அரசாங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.