follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வவுச்சர்கள்

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வவுச்சர்கள்

Published on

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவாலை எதிர்கொள்ளும் மாணவிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பின்தங்கிய கிராமங்கள், மிகவும் பின்தங்கிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு லட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனவும் ஒரு வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1200 ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் ஜனாதிபதியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் துயர மரணம் தொடர்பில் முன்னாள்...

இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு உலக நாடுகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றது. பலஸ்தீன் - "இழப்பு துயரமானது,...

இலங்கையை சேர்ந்த ISIS பயங்கரவாதிகள் 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் இந்தியா அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...