follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

Published on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 447 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டரின் விலை 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

அதேநேரம் 468 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீட்டர் ஒன்றின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

அதேநேரம் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 371 ரூபாய்க்கும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 363 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லங்கா IOC நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு நிகரான விலைக்கு தனது எரிபொருள் விலை திருத்தத்தினை மேற்கொண்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...