follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுராகம வைத்தியசாலையில் நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணை

ராகம வைத்தியசாலையில் நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணை

Published on

ராகம போதனா வைத்தியசாலையில் கோ-அமோக்ஸிக்லெவ் என்ற ஊசி மருந்தை செலுத்திய பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில் உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.

கோ-அமோக்ஸிக்லெவ் ஊசி மருந்தினை ஏற்றிய பிறகு நோயாளி இறந்தாரா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமையால் மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

தெனிய மாவரல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

காது வலி காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையின் 21ஆம் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...