follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2புத்தாண்டின் மிகப்பெரிய 'பாற்சோறு' வெலிக்கடை சிறையில்

புத்தாண்டின் மிகப்பெரிய ‘பாற்சோறு’ வெலிக்கடை சிறையில்

Published on

இந்த ஆண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை சமையலறையில் பாற்சோறு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாற்சோறு தயாரிக்க சுமார் நாற்பது கைதிகள் வரவழைக்கப்படவுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

700 கிலோ பாற்சோறு தயார் செய்கிறார்கள்.

இது வெலிக்கடை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கானது.
நேற்றைய நிலவரப்படி, அந்த பிரிவில் அடைக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை 4,064.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உட்பட அனைத்து கைதிகளும் ஒன்றிணைக்கப்பட உள்ளனர்.

இவர்களுக்கு இசை கச்சேரியும் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

UPDATE – கந்தானை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

கந்தானையில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கந்தானை பொதுச்...

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...