follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

Published on

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ கிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் விநியோகம் சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அரிசி மூடைகள் பயனாளிகள், நலன்புரி திட்டத்திற்காக முறையீடு செய்த மக்களில் நலன்புரிப் பலன்கள் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நலத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத சமுர்த்தி பயனாளிகள், நலன்புரிப் பெறாத முதியோர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்குத் தேவையான 54,800 மெட்ரிக் டன் அரிசியை விநியோகத்தர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 30ஆம்...