follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

Published on

2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 695 புதிய எச்ஐவி தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார நிபுணர் ஜானகி விதானராச்சி தெரிவித்துள்ளார்.

இது முன்னைய 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரிப்பு ஆகும்.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் நடத்தப்பட்ட மருத்துவ மனைகளில் கண்டறியப்பட்ட HIV STD நோயாளிகளின் எண்ணிக்கை நாற்பது சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பால்வினை நோய்கள் தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் சுகாதார திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாடசாலைக் காலத்தில் வயதுக்கேற்ற பாலினக் கல்வி வழங்கப்பட வேண்டுமென வைத்திய நிபுணரான ஜானகி விதானராச்சி குறிப்பிடுகின்றார்.

எச்.ஐ.வி மற்றும் பாலின பரவும் நோயால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், know for sure என்ற தொலைபேசி செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம் மற்றும் நோய் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யலாம். பின்னர் அவர்கள் தங்கள் சுய பரிசோதனை கருவி பற்றிய தகவல்களை இரகசியமாக வீட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் கவிழ்ந்து விபத்து – 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து...

தரம் 1 மாணவர் சேர்க்கை – விண்ணப்பம் வெளியானது

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...