உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நாளை (13) பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ள சுகாதார ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நாளை ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த காலங்களில் பல தடவைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், DAT க்கு இணையான கொடுப்பனவு அல்லது போக்குவரத்து மற்றும் வைத்தியர்களுக்கு கட்டுப்பாடற்ற கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி இருந்தது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.