follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1மத்திய மாகாணத்தில் நாளை சுகாதார பணிப்புறக்கணிப்பு

மத்திய மாகாணத்தில் நாளை சுகாதார பணிப்புறக்கணிப்பு

Published on

உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நாளை (13) பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ள சுகாதார ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நாளை ஆரம்பமாகவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கியதாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த காலங்களில் பல தடவைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், DAT க்கு இணையான கொடுப்பனவு அல்லது போக்குவரத்து மற்றும் வைத்தியர்களுக்கு கட்டுப்பாடற்ற கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி இருந்தது.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...

இன்று பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...