follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1குளியாப்பிட்டிய இளைஞர் கொலையில் காதலி கைது

குளியாப்பிட்டிய இளைஞர் கொலையில் காதலி கைது

Published on

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய பிரதேசத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மாதம்பை, பனிரெண்டாவ பிரதேசத்தில் கடந்த 7ம் திகதி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காணாமல் போன இளைஞன் காதல் தொடர்பு முரண்பாட்டில் கொலை செய்யப்பட்டதாகத் முதல் கட்டமாக சந்தேகிக்கப்பட்டுள்ளதுடன் , இவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார் .

குறித்த இளைஞரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் ஆஜராகிய பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் .

வெலிமடை மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் இந்தக் கொலைக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் .

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுகேன பிரதேசத்தில் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது .

இந்த இளைஞனின் கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...