follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1ஈஸ்டர் தாக்குதல் இழப்பீட்டிற்கு மைத்திரி மேலும் 28 மில்லியன் ரூபாய் வரவு

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீட்டிற்கு மைத்திரி மேலும் 28 மில்லியன் ரூபாய் வரவு

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக ‘ஈஸ்டர் தாக்குதல் ஏப்ரல் 2019 – பாதிக்கப்பட்ட நிதி’ என்ற பெயரில் நிறுவப்பட்ட நிதிக்கு மேலும் 28 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 22ஆம் திகதி 15 மில்லியன் ரூபாவாகவும், 30ஆம் திகதி 13 மில்லியன் ரூபாவாகவும் இந்த தொகையை வரவு வைத்துள்ளார்.

இதன்படி, இதுவரை செலுத்தப்பட வேண்டிய 10 மில்லியன் ரூபாவில் 43 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.

இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டதன் மூலம், ஏப்ரல் 30ஆம் திகதி வரை, 64,825,588.87 ரூபாய் இந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் உயிர்த்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவிருந்த 10 மில்லியன் ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளது

மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர 1,725,588.87 ரூபாவையும், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன இதுவரை 4.1 மில்லியன் ரூபாவையும் செலுத்தியுள்ளார்.

மேலும், அரசு சார்பில் செலுத்த வேண்டிய ரூ.1 மில்லியன் தொகையும் திறைசேரி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...