இலங்கையிலுள்ள அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இரண்டாம் கட்டம் இம்மாதம் (மே) இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாக இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கி இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதன்படி இம்மாத இறுதியில் மாவட்ட செயலகங்கள் ஊடாக 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படவுள்ளது.