நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய வழிக்கு மாற்று வழி இருப்பதாக ஏதேனும் தரப்பினர் கூறினால், சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று அந்த மாற்றுவழி குறித்து கலந்துரையாடுமாறும் அவர்களுக்கு அரசாங்க செலவில் விமானப் பயணச்சீட்டு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சிகள் முன்வைக்கும் மாற்றுக் கருத்துக்கள் நல்லவையாக இருந்தால் அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இனியும் பழைய அரசியலில் ஈடுபட முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, இன்று நாம் எடுக்கும் தீர்மானங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.